கனடாவில் காணாமல் போன 2 வயது மகன்: கண்ணீருடன் உதவி கோரிய பெற்றோர் (வீடியோ இணைப்பு)
மனிடோபா நகரில் உள்ள ஒரு குடியிருப்பில் டோம் மார்ட்டின்ஸ் மற்றும் டெஸ்டினி டர்னர் என்ற தம்பதி தங்களது சேஸ் மார்ட்டின்ஸ் என்ற 2 வயது ஆண் குழந்தையுடன் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 6 மணியளவில் வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டு இருந்தபோது சேஸ் திடீரென காணாமல் போயுள்ளான்.
மகனை காணாமல் தவித்த பெற்றோர் உடனடியாக பொலிசாரிடம் புகார் அளித்தனர். புகாரை பெற்ற பொலிசார் சுமார் 500க்கும் மேற்பட்ட தன்னார்வ நபர்களை திரட்டிக்கொண்டு குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
குழந்தை காணாமல் போய் தற்போது 3 நாட்கள் ஆகியுள்ள நிலையில், பெற்றோர் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், ‘எங்களுடை குழந்தையை காணாமல் மரண வேதனையில் துடித்துக் கொண்டு இருக்கிறோம்.
குழந்தையை யார் வைத்திருந்தாலும் கூட, அச்சப்பட வேண்டாம். உங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம். உங்கள் மீது எந்த கோபமும் இல்லை. தயவுசெய்து உடனடியாக குழந்தையை ஒப்படைத்து விடுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், குழந்தை குறித்து தகவல் அறிந்தவர்கள் உடனடியாக தங்களை தொடர்பு கொள்ளுமாறு பெற்றோர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
