சிறுவனை விரட்டிச் சென்று கடித்து குதறிய பொலிஸ் நாய்: மன்னிப்பு கோரிய காவல்துறை (வீடியோ இணைப்பு)
அல்பேர்ட்டா மாகாணத்தில் உள்ள கல்கேரி நகரில் கடந்த புதன்கிழமை அன்று விடுமுறையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தன்னுடைய பொலிஸ் நாயுடன் வீட்டின் பின்புறத்தில் இருந்துள்ளனர்.
அப்போது, எதிர்பாராதவிதமாக தப்பிய பொலிஸ் நாய் அங்கிருந்து வெளியேறி அருகில் இருந்த வீட்டு தோட்டத்திற்குள் நுழைந்துள்ளது.
அங்கு 3 சிறுவர்கள் விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர்.
மூவரையும் நோக்கி நாய் சென்றபோது, மூவரில் 12 வயதான ஒரு சிறுவன் நாயை பார்த்து அஞ்சி அங்கிருந்து தலை தெரிக்க ஓடியுள்ளான்.
பொலிஸ் நாயின் முன்னால் ஓடினால், அதுவும் துரத்தும் என்பதால் சிறுவன் ஓடுவதை கண்டு நாயும் அவனை துரத்திக்கொண்டு சென்றுள்ளது.
சிறுவன் வீட்டிற்குள் நுழைந்ததும் அவனை பின் தொடர்ந்து வந்த நாய் அவனது காலை கவ்வி குதறியுள்ளது.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வந்த தந்தை நாயை விரட்டியபோது, நாயின் பராமரிப்பாளரும் அங்கு வந்து சிறுவனை பத்திரமாக மீட்டுள்ளார்.
இந்த சம்பத்தில் சிறுவனின் காலில் தையல்கள் போடும் அளவிற்கு நாய் கடித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று சிறுவனின் வீட்டிற்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் சிறுவன் மற்றும் அவனது தந்தையிடம் வருத்தம் தெரிவித்தனர்.
மேலும், நாயின் செயல்பாடுகள் குறித்து பரிசோதனை செய்யப்படும் என்றும், இதுபோன்ற ஒரு சம்பவம் இனி நடக்காது என பொலிசார் உறுதியளித்துள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
