அகதிகள் முகாமில் பாலியல் தாக்குதலை தடுக்க நடவடிக்கை: 200 மில்லியன் யூரோ ஒதுக்கீடு
புத்தாண்டு தொடங்கியது முதல் ஜேர்மனியில் பாலியல் தாக்குதல் விவகாரம் ஒரு முக்கிய விவாதமாக மாறியுள்ளது.
குடிமக்கள் மீது அகதிகள் பாலியல் தாக்குதலை நடத்துவது, அகதிகள் முகாம்களில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பாலியல் தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட விவகாரங்கள் அரசுக்கு கவலையை ஏற்படுத்தி வந்துள்ளன.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள அகதிகள் முகாம்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த 200 மில்லியன் யூரோ ஒதுக்கியுள்ளதாக அந்நாட்டு குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இத்துறையின் அமைச்சரான Ralf Kleindiek என்பவர் பேசுகையில், ‘முகாம்களில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், பெண்கள் ஆண்களுக்கு என பாதுகாப்பான இடவசதிகளையும் ஏற்படுத்து உள்ளது.
இதன் முதற்கட்டமாக 200 மில்லியன் யூரோ நிதியை நகராட்சி அதிகாரிகள் KfW என்ற வங்கி மூலமாக வட்டி இல்லாமல் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாவும் அவர் அந்த செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமில்லாமல், போர்ச்சூழல்களில் இருந்து மீண்டு வந்த அகதிகளின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் சுமார் 4 மில்லியன் யூரோ செலவில் ஆலோசனைகள் வழங்கப்படும் என Ralf Kleindiek தெரிவித்துள்ளார்.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்
நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
