பிரான்ஸில் புகலிடம் கோரி வந்த அகதி: லொறியில் மோதி பலியான பரிதாபம்
பாரீஸிற்கு அருகில் உள்ள ‘ஜங்கல்’ எனப்படும் கேலைஸ் அகதிகள் முகாமில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 22 வயதான அகதி ஒருவர் தங்கியிருந்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேறி பிரித்தானியாவில் குடியேற அவர் பலமுறை முயன்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று காலை 6 மணியளவில் சேனல் பாதை வழியாக அவர் நடைப்பயணமாக சென்றுள்ளார்.
அப்போது எதிரே பாய்ந்து வந்த லொறி ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.
இந்த விபத்தில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அந்த நபர் அதே இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
நபர் மீது மோதி விட்டு தப்பிச்சென்ற லொறி ஓட்டனரை பொலிசார் தேடி வருகின்றனர்.
கடந்த யூன் மாதம் முதல் தற்போது வரை இந்த கேலைஸ் அகதிகள் முகாமில் தங்கியிருந்த 20 அகதிகளில் இதுபோன்ற விபத்துக்களில் சிக்கி பலியாகியுள்ளனர்.
சில வாரங்களுக்கு முன்னர் இந்த அகதிகள் முகாமில் உள்ள நபர்களை வெளியேற்றும் நடவடிக்கையை தொடர்ந்து தற்போது சுமார் 3,500 அகதிகள் இந்த முகாமில் தங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
