சூட்டை கிளப்பும் மின்னஞ்சல் விவகாரம்: ஹிலாரி கிளிண்டனை நெருங்கும் எப்பிஐ!
மின்னஞ்சல் ஊழல் தொடர்பான விசாரணையை இந்த வாரத்திற்குள் முடிவுக்கு கொண்டுவர இருப்பதால் எப்.பி.ஐ. அதிகாரிகள் ஹிலாரி கிளிண்டனை விசாரிக்க கூடும் என கூறப்படுகிறது.
விசாரணை தற்போது ஆபத்து கட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், விசாரணை அதிகாரிகள் ஹிலாரி அனுப்பியதாக கூறும் அனைத்து மின்னஞ்சல்களையும் பரிசோதித்து முடித்துள்ளது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஹிலாரி கிளிண்டனின் உயர்மட்ட உதவியாளர்களை விசாரிக்க எப்.பி.ஐ முனைப்பு காட்டி வருகிறது, கூடவே ஹிலாரியையும் விசாரிக்க கூடும் என தெரிய வந்துள்ளது.
இந்த விசாரணைகள் முடிவுக்கு வருவதற்கு முன்னர் அல்லது அதன் பின்னர், எப்.பி.ஐ. இயக்குனர் ஜேம்ஸ் Comey குற்றவியல் நடவடிக்கை குறித்து அட்டர்னி ஜெனரல் லொரிட்டா லிஞ்சிடம் தமது பரிந்துரைகளை தெரிவிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த விசாரணையை விரைந்து முடிக்கும் பொருட்டு 147 அதிகாரிகளை எப்.பி.ஐ. நியமித்துள்ளதாகவும்,
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக இந்த வழக்கினை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அதன் இயக்குனர் ஜேம்ஸ் Comey விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஹிலாரி கிளிண்டன அனுப்பியதாக கூறப்படும் மின்னஞ்சல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுமக்களின் பார்வைக்கு உள் விவகாரத்துறை வெளியிட்டது.
அதில் 22 மின்னஞ்சல்கள் உயர்மட்ட ரகசியமானது என குறிப்பிடப்பட்டிருந்தன. மேலும் நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள் ரகசியமானது எனவும் நம்பகத்தன்மை வாய்ந்தது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தன.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
