சூட்டை கிளப்பும் மின்னஞ்சல் விவகாரம்: ஹிலாரி கிளிண்டனை நெருங்கும் எப்பிஐ!
மின்னஞ்சல் ஊழல் தொடர்பான விசாரணையை இந்த வாரத்திற்குள் முடிவுக்கு கொண்டுவர இருப்பதால் எப்.பி.ஐ. அதிகாரிகள் ஹிலாரி கிளிண்டனை விசாரிக்க கூடும் என கூறப்படுகிறது.
விசாரணை தற்போது ஆபத்து கட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், விசாரணை அதிகாரிகள் ஹிலாரி அனுப்பியதாக கூறும் அனைத்து மின்னஞ்சல்களையும் பரிசோதித்து முடித்துள்ளது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஹிலாரி கிளிண்டனின் உயர்மட்ட உதவியாளர்களை விசாரிக்க எப்.பி.ஐ முனைப்பு காட்டி வருகிறது, கூடவே ஹிலாரியையும் விசாரிக்க கூடும் என தெரிய வந்துள்ளது.
இந்த விசாரணைகள் முடிவுக்கு வருவதற்கு முன்னர் அல்லது அதன் பின்னர், எப்.பி.ஐ. இயக்குனர் ஜேம்ஸ் Comey குற்றவியல் நடவடிக்கை குறித்து அட்டர்னி ஜெனரல் லொரிட்டா லிஞ்சிடம் தமது பரிந்துரைகளை தெரிவிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த விசாரணையை விரைந்து முடிக்கும் பொருட்டு 147 அதிகாரிகளை எப்.பி.ஐ. நியமித்துள்ளதாகவும்,
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக இந்த வழக்கினை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அதன் இயக்குனர் ஜேம்ஸ் Comey விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஹிலாரி கிளிண்டன அனுப்பியதாக கூறப்படும் மின்னஞ்சல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுமக்களின் பார்வைக்கு உள் விவகாரத்துறை வெளியிட்டது.
அதில் 22 மின்னஞ்சல்கள் உயர்மட்ட ரகசியமானது என குறிப்பிடப்பட்டிருந்தன. மேலும் நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள் ரகசியமானது எனவும் நம்பகத்தன்மை வாய்ந்தது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தன.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
