நள்ளிரவில் திடீர் தீவிபத்து: குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி
ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள Pikangikum என்ற நகரில் 3 தலைமுறைகளை சேர்ந்த 9 பேர் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்திலிருந்து தப்பிக்க முடியாத 5 வயதுடைய 3 குழந்தைகள் உள்பட 9 பேரும் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
எனினும், வீட்டிற்குள் தீவிபத்து எப்படி ஏற்பட்டது என்பதை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த துயரமான சம்பவத்தை அறிந்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அப்பகுதி மக்களின் துயரத்தில் தானும் பங்கேற்பதாகவும், அவர்களின் தேவைகளை உடனடியாக தீர்க்கப்படும் என கூறி இரங்கல் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
இந்த பகுதியில் வீடுகளின் கட்டமைப்புகள் மிகவும் மோசமாகவும், இங்கு வாழும் மக்கள் வறுமையில் வாழ்வதால் அடிக்கடி தற்கொலை நிகழ்வுகளும் நடந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஓண்டாரியோ மாகாணத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
