8 வயது சிறுவனை விமான நிலையத்தில் சிறை வைத்த அதிகாரிகள்: காரணம் என்ன?
இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள Comoros என்ற தீவில் தாயார் ஒருவர் தனது 8 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார்.
குடும்பம் வறுமையில் வாடியதால் தனது மகனாவது நல்ல வாழ்க்கையை அனுபவிக்கட்டும் என நினைத்த தாயார் சிறுவனை பிரான்ஸ் நாட்டில் உள்ள உறவினர்களிடம் அனுப்ப முடிவு செய்தார்.
இதனை தொடர்ந்து உறவினர் ஒருவரின் கடவுச்சீட்டை பயன்படுத்தி சிறுவனை தனியாக விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.
பாரீஸில் உள்ள Roissy-Charles de Gaulle என்ற விமான நிலையத்திற்கு கடந்த மார்ச் 21ம் திகதி விமானம் வந்துள்ளது.
ஆனால், சிறுவனை பரிசோதித்து சந்தேகம் அடைந்த விமான அதிகாரிகள் அவனை அங்குள்ள ஒரு தடுப்பு முகாமில் ஒரு வார காலமாக அடைத்து வைத்துள்ளனர்.
’சிறுவனை விமான நிலையத்திலேயே வைத்திருப்பது சிறுவனது பாதுகாப்பிற்கும் அவசியமானது’ என நீதிமன்றமும் பரிந்துரை செய்துள்ளது.
ஆனால், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த குழந்தைகள் நல சங்கம் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
குழந்தைகள் நல வழக்கறிஞரான Catherine Daoud என்பவர் பேசியபோது, ‘தனியாக வந்த 8 வயது குழந்தையை ஒரு வாரத்திற்கும் அதிகமாக தடுப்பு முகாமில் அடைத்து வைத்திருந்தது சர்வதேச குழந்தைகள் நல சட்டங்களுக்கு எதிரானது ஆகும்.
’எனது மகனை என்னிடமே அனுப்பி விடுங்கள்’ என சிறுவனின் தாயார் கோரிக்கை விடுத்திருப்பதால், அந்த சிறுவனை உடனடியாக தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.
பல்வேறு எதிர்ப்புகளை தொடர்ந்து சிறுவனை பாதுகாப்பாக தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்ப பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
