வீடு வாடகைக்கு விட மறுத்த உரிமையாளர்: அதிரடியாக அபராதம் விதித்த நீதிமன்றம்
ஜேர்மனியில் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் சட்டப்பூர்வமாக திருமணம் செய்துக்கொள்ள முடியாது. ஆனால், அவர்களின் அடிப்படை உரிமைகளை காக்க சட்டங்கள் உள்ளன.
கலோன் நகரை சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய சொகுசான வீட்டை புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு வாடகைக்கு விட்டு அதன் மூலம் வருமானம் ஈட்டி வந்துள்ளார்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் ஓரினச்சேர்க்கை தம்பதியான இரு ஆண்கள் அந்த வீட்டை வாடகைக்கு கேட்டுள்ளனர்.
இருவரும் ஒரே பாலினத்தை சேர்ந்த தம்பதி என்பதால் அவர்களுக்கு வீடு வாடகைக்கு விட உரிமையாளர் மறுத்துள்ளார்.
இந்த சம்பவத்தால் அவமானம் அடைந்த தம்பதி ‘தங்களுக்கு எதிராக பாலியல் பாகுபாடு பார்க்கப்படுவதாக’ நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை கடந்த செவ்வாய் கிழமை நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.
வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், ஓரினச்சேர்க்கை நபர்கள் சட்டப்பூர்வமாக திருமணம் செய்துக்கொள்ள தான் தடை உள்ளதே தவிர அவர்களது அடிப்படை உரிமைகளை பறிப்பதற்கு அல்ல.
எனவே, வீடு வாடகைக்கு விட மறுத்த உரிமையாளருக்கு 1,700 யூரோ அபாரதம் விதிப்பதாக உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
