அகதிகளுக்காக ஒதுக்கிய 5,00,000 டொலர் பணத்தை சூதாடி இழந்த பாதிரியார்: கனடாவை அதிர வைத்த மோசடி
ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள லண்டன் நகரில் St. Joseph Chaldean என்ற கத்தோலிக்க தேவாலயம் இயங்கி வருகிறது.
ஈராக் நாட்டை பூர்வீகமாக கொண்ட இந்த தேவாலயத்திற்கு வரும் ஈராக் நாட்டு பாதிரியார்கள் மற்றும் அகதிகளுக்கு தகுந்த உதவிகள் செய்து தரப்படும்.
இந்த தேவாலயத்தில் அமீர் சாகா என்பவர் பாதிரியாராகவும், இமானுவேல் ஷாலேடா என்பவர் மதகுருவாகவும் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், ஈராக் நாட்டிலிருந்து புகலிடம் கோரி வந்த சுமார் 20 அகதிகளின் தேவைகளுக்காக 5,00,000 டொலர் பணம் பாதிரியார் அமீர் சாகாவின் வங்கி கணக்கிற்கு சில மாதங்களுக்கு முன்னர் மாற்றப்பட்டுள்ளது.
ஆனால், இந்த தொகை அனைத்தையும் அவர் சூதாட்டத்தில் வைத்து செலவளித்துள்ளதாக தற்போது புகார்கள் எழுந்துள்ளது.
இதுமட்டுமில்லாமல், மதகுருவிடம் தனது தவறுகளை பாதிரியார் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அவரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த மோசடி பற்றி மதகுரு பேசியபோது, ‘அகதிகள் பாதிரியாரை மிகவும் நம்பினார்கள். இந்த பணத்தை அவருக்கு அன்பளிப்பாக ஒன்றும் அளிக்கவில்லை.
ஆனால், அந்த நம்பிக்கையை பாதிரியார் கெடுத்துவிட்டார். எனினும், இது அவருடைய தனிப்பட்ட நடவடிக்கை என்றும், அவரது செயலுக்கும் தேவாலாயத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது’ என கூறியுள்ளார்.
அகதிகளுக்காக ஒதுக்கிய பணத்தை பாதிரியார் மோசடி செய்துள்ளதாக எழுந்துள்ள இந்த புகார்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
