‘அகதிகளுக்கு ஜேர்மன் மொழி தெரியாவிட்டால், குடியிருப்பு அனுமதி கிடையாது’: வருகிறது புதிய சட்டம்
ஜேர்மன் சான்சலரான ஏஞ்சிலா மெர்க்கலின் அகதிகளுக்கான தாராள கொள்கைகள் அந்நாட்டு பொதுமக்களிடையே பலத்த எதிர்ப்பை சந்தித்து வருகிறது.
இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற உள்மாகாண தேர்தலில் ஏஞ்சிலா மெர்க்கலின் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதன் மூலம், ஏஞ்சிலா மெர்க்கலிற்கு எதிர்ப்புகள் வலுத்து வருவதையே காட்டுகிறது.
இந்நிலையில், ஏஞ்சிலா மெர்க்கலின் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரும் ஜேர்மனி உள்துறை அமைச்சருமான Thomas de Maiziere ஒரு அதிரடி அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளார்.
அதில், ‘ஜேர்மனியில் புகலிடம் கோரி வருபவர்கள் கட்டாயம் ஜேர்மன் மொழியை கற்றுக்கொண்டு, சமுதாயத்துடன் இணக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
தங்களுடைய உறவினர்களையும் பிற குடிமக்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட ஒத்துழைக்க வேண்டும்.
ஜேர்மன் அரசு ஏற்பாடு செய்யும், அல்லது அகதிகளுக்கு வரும் வேலைவாய்ப்புகளை அவர்கள் கட்டாயம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இதனை அகதிகள் பின்பற்றாவிட்டால், 3 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களுக்கு நிரந்தர குடியிருப்பு அனுமதியை ரத்து செய்யப்படும். இதற்காக விரைவில் ஒரு புதிய சட்டத்தை இயற்ற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியின் துணை சான்சலரான Sigmar Gabriel இந்த புதிய சட்டத்தை வரவேற்றுள்ளார்.
ஜேர்மனியில் கடந்தாண்டு மட்டும் ஒரு மில்லியன் அகதிகளும் இந்தாண்டு தொடக்கம் முதல் ஒரு லட்சம் அகதிகளும் ஜேர்மனிக்குள் வந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
