வெள்ளை மாளிகையின் பார்வையாளர் மையத்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம், பாதுகாப்பு அதிகரிப்பு! (வீடியோ இணைப்பு)
அமெரிக்க ஜனாதிபதியின் அலுவகலகமான வெள்ளை மாளிகை தலைநகர் வாசிங்டனில் அமைந்துள்ளது.
இந்த வெள்ளை மாளிகை வளாகத்தினுள் அமைந்துள்ள பார்வையாளர் மையத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட்தாக தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த மர்ம நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் அங்கிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் உயிரிக்கு ஆபத்தான நிலையில் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகையின் பார்வையாளர் மையத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து பிடிபட்ட நபரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது பொதுமக்கள் பீதி அடையத்தக்க சம்பவம் இல்லை எனவும் இதனால் பொதுமக்களுக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை எனவும் விசாரணை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடைபெற்ற பகுதியின் சில மீற்றர்கள் தொலைவில்தான் ஜனாதிபதி ஒபாமா ஈஸ்டர் விழா சிறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்துக்கொண்டிருந்தார்.
மேலும் அந்த விழா நடைபெற்ற பகுதியில் சுமார் 35,000 பொதுமக்கள் குழுமியிருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
உத்தரபிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் அதிகமாக உள்ளது: காங்கிரசின் பிரவீன் சக்ரவர்த்தி தகவல்
கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட தொழிலாளி கொலை: கல்லூரி மாணவர் கைது
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
