இந்தப் பெண்ணைக் கண்டுபிடிப்பவர்களுக்கு 50,000 டொலர்கள்! கனேடியப் பொலிஸார் அறிவிப்பு

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
இந்தப் பெண்ணைக் கண்டுபிடிப்பவர்களுக்கு 50,000 டொலர்கள்! கனேடியப் பொலிஸார் அறிவிப்பு

கனடாவில் கடந்தாண்டு மாயமான பெண் ஒருவரை கண்டுபிடிக்க உதவும் நபர்களுக்கு 50,000 டொலர்கள் வெகுமதி அளிக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கனடாவை சேர்ந்த லொறென் றோச் என்ற(Loren Roch-58) பெண் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் காணாமல் போய் விட்டார்.

இவர் கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் 11ம் திகதி அவரது வீட்டில் இருந்து வெளியேறும் போது கடைசியாக காணப்பட்டார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர்.

மேலும் தீவிர் தேடுதல் வேட்டை நடத்தியும் இப்பெண்ணை கண்டுபிடிக்க முடியாததால் தற்போது பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், இப்பெண்ணை பற்றி தகவல் தெரிந்தவர்கள் 705-742-0401 அல்லது 1-888-310-1122 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளுங்கள் என்றும் சரியாக தகவலளிப்பவருக்கு 50,000 டொலர்கள் சன்மானம் அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை