கனடா கடல் பகுதியில் எரிவாய் எடுக்க திட்டமிடும் அமெரிக்கா: வலுக்கும் எதிர்ப்புகள்
ஆர்டிக் சமுத்திரத்தில் அமைந்துள்ள Beaufort கடல் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வருகிறது.
கனடா இப்பகுதியை தனது எல்லையின் ஒரு பகுதியாக கூறி வருகிறது. இந்நிலையில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவை எடுப்பதற்காக இந்த கடலில் துளையிட்டுகொள்வது தொடர்பான புதிய குத்தகை அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் பெருங்கடல் சக்தி மேலாண்மை அமைப்பு (BOEM) தனது 2017 முதல் 2020ஆம் ஆண்டு வரையான திட்டம் தொடர்பான அறிவிப்பில் இது குறித்து தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திட்டம் செயல்படுத்தும் பகுதிகளில் உள்ள மக்களிடம் ஆலோசனை நடத்தவும் BOEM திட்டமிட்டுள்ளது
இந்நிலையில் இது கனடாவின் இறையாண்மையை மீறும் செயல் என கனடாவின் யுகொன் மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக யுகொன் நீதித்துறை அமைச்சர் ப்ராட் காத்தர்ஸ் கூறுகையில், அமெரிக்காவின் இந்த செயல் கனடாவின் இறையான்மையை மீறும் செயல்.
குறிப்பிட்ட அந்த பகுதி யுகொன் மற்றும் கனடாவுக்கே சொந்தம் என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல், எல்லை தொடர்பான பிரச்சனைக்கு முடிவு கிட்டும் வரையில் அமெரிக்கா எந்த திட்டத்தையும் செயல்படுத்த கூடாது என்று யுகொன் மாகாணத்தின் பிரீமியர் Darrell pasloski பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
