பாரீஸ் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதியின் பகீர் வாக்குமூலம்: வெளியான தகவல்கள்
பாரீஸில் 3 முக்கிய இடங்களில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த கொடூரச்செயலில் ஈடுப்பட்ட தீவிரவாதிகளில் சிலர் சுட்டு கொல்லப்பட்ட நிலையில், இதற்கு மூளையாக செயல்பட்டதாக கருதப்படும் Salah Abdeslam(26) என்ற தீவிரவாதி பொலிசாரிடம் சிக்காமல் பெல்ஜியம் நாட்டிற்கு தப்பியுள்ளான்.
கடந்த 4 மாதங்களாக பொலிசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு, நேற்று முன் தினம் பொலிசார் அந்த தீவிரவாதியை கைது செய்தனர்.
தற்போது பெல்ஜியத்தில் ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சில தினங்களுக்கு பிறகு பிரான்ஸ் குடிமகனான அந்த தீவிரவாதியை பிரான்ஸ் நாட்டிற்கு நாடு கடத்தவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Francois Molins என்ற விசாரணை அதிகாரி பேசியபோது, ‘பாரீஸில் தாக்குதல் நடத்தியதற்கு முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அந்த நபரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
’தற்போது கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதி தன்னுடைய உடல் முழுவதும் குண்டுகளை சுற்றிக்கொண்டு தன்னை தானே வெடித்து தாக்குதலை நடத்தும் திட்டத்தில் வந்துள்ளார்.
ஆனால், குண்டுகளை வெடிக்க வைப்பதற்கு சில வினாடிகளுக்கு முன்னர் அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளதாக’ தெரிவித்துள்ளார்.
தற்கொலை செய்துக்கொள்வதற்கு அச்சப்பட்டு அதனை தவிர்த்தாரா அல்லது மற்ற காரணமா? என விசாரணை நடைபெற்று வருதாக Francois Molins தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாரீஸ் தாக்குதலுக்கு பின்னணியாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் நபர் உயிருடன் கைது செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தாக்குதலில் பலியான நபர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
