பிரான்ஸில் விமான போக்குவரத்து பாதிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு அவசர அறிவிப்பு
பிரான்ஸின் தலைநகரான பாரீஸில் உள்ள Orly விமான நிலையம், Beauvais, Lyon, Nice மற்றும் Marseille ஆகிய 5 முக்கிய விமான நிலையங்களில் பணிபுரிந்து வரும் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர்கள் எதிர்வரும் ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய 2 நாட்களில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால், நாடு முழுவதும் விமான போக்குவரத்து பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பிரான்ஸ் சிவில் விமான போக்குவரத்து துறையான DGAC நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் ‘ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், பயணிகள் பெருமளவில் பாதிக்கப்படுவதுடன் பாதுகாப்பு பிரச்சனைகளும் எழ வாய்ப்புள்ளது.
எனவே, இதனை தவிர்க்க விமான நிறுவனங்கள் 20 சதவிகித விமான சேவையை குறைக்க வேண்டும்’.
மேலும், விமான சேவையை பயன்படுத்த உள்ள பயணிகள் முன்கூட்டிய விமானங்களின் நிலவரங்கள் குறித்து அறிந்துக்கொள்ள வேண்டும்’ என பொதுமக்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் மூன்றாவது பெரிய தொழிற்சங்கமான Unsa என்ற சங்கம் தான் தற்போது இந்த வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.
தற்போது பணியில் இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க விமான நிறுவனங்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த போராட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
