ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த ஜேர்மனியர்: ‘பொறி’ வைத்து பிடித்த பொலிசார்
மேற்கு ஜேர்மனியில் உள்ள Bielefeld என்ற நகரில் Tarik S என பெயருடைய 22 வயதான வாலிபர் ஒருவர் படித்து விட்டு வேலையின்றி சுற்றி வந்துள்ளார்.
இவர் கடந்த 2013ம் ஆண்டு எகிப்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டு ஜனாதிபதிக்கு எதிராக போராட்டங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.
ஒரு முறை கெய்ரோவில் நடைபெற்ற தாக்குதலில் இவருக்கு குண்டு காயம் ஏற்பட அங்கிருந்து ஜேர்மனிக்கு திரும்பியுள்ளார்.
பின்னர், இதே ஆண்டில் தீவிரவாதிகளால் மூளை சலைவை செய்யப்பட்ட இந்த வாலிபர் இங்கிருந்து சிரியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
சிரியாவுக்கு சென்ற 3 வாரங்களில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து பல்வேறு தாக்குதல் வீடியோக்களில் தோன்றியுள்ளார்.
இந்நிலையில், சிரியாவிலிருந்து அந்த நபர் தாய்நாடான ஜேர்மனிக்கு திரும்புவதாக பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலை பெற்ற பொலிசார் கடந்த புதன்கிழமை அன்று Frankfurt விமான நிலையத்தில் பொலிசாரை குவித்துள்ளனர்.
பொலிசார் எதிர்பார்த்தது போலவே நபர் விமான நிலையத்தில் இறங்கியதும் பொலிசார் விரித்திருந்த வலையில் சிக்கி கைது செய்யப்பட்டார்.
நபர் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ள பொலிசார் அவரை Karlsruhe நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணை செய்து வருகின்றனர்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
