ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த ஜேர்மனியர்: ‘பொறி’ வைத்து பிடித்த பொலிசார்
மேற்கு ஜேர்மனியில் உள்ள Bielefeld என்ற நகரில் Tarik S என பெயருடைய 22 வயதான வாலிபர் ஒருவர் படித்து விட்டு வேலையின்றி சுற்றி வந்துள்ளார்.
இவர் கடந்த 2013ம் ஆண்டு எகிப்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டு ஜனாதிபதிக்கு எதிராக போராட்டங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.
ஒரு முறை கெய்ரோவில் நடைபெற்ற தாக்குதலில் இவருக்கு குண்டு காயம் ஏற்பட அங்கிருந்து ஜேர்மனிக்கு திரும்பியுள்ளார்.
பின்னர், இதே ஆண்டில் தீவிரவாதிகளால் மூளை சலைவை செய்யப்பட்ட இந்த வாலிபர் இங்கிருந்து சிரியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
சிரியாவுக்கு சென்ற 3 வாரங்களில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து பல்வேறு தாக்குதல் வீடியோக்களில் தோன்றியுள்ளார்.
இந்நிலையில், சிரியாவிலிருந்து அந்த நபர் தாய்நாடான ஜேர்மனிக்கு திரும்புவதாக பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலை பெற்ற பொலிசார் கடந்த புதன்கிழமை அன்று Frankfurt விமான நிலையத்தில் பொலிசாரை குவித்துள்ளனர்.
பொலிசார் எதிர்பார்த்தது போலவே நபர் விமான நிலையத்தில் இறங்கியதும் பொலிசார் விரித்திருந்த வலையில் சிக்கி கைது செய்யப்பட்டார்.
நபர் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ள பொலிசார் அவரை Karlsruhe நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணை செய்து வருகின்றனர்.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்
நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
