சாலையின் நடுவே ராட்சத மலைப்பாம்பு வந்தது எப்படி?: குழப்பத்தில் பொலிசார்
தெற்கு ஜேர்மனியில் உள்ள Baden-Wurttemberg மாகாணத்தை சேர்ந்த Lorch என்ற சிறிய நகரில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று இரவு 7 மணியளில் அப்பகுதி பொலிசாருக்கு அவசர தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அதில், ‘சாலையின் நடுவில் மலைப்பாம்பு ஒன்று அசைவின்று படுத்துள்ளதாக’ வாகன ஓட்டிகள் தகவல் அளித்துள்ளனர்.
தகவலை பெற்ற பொலிசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது 4 மீற்றர் நீளமுள்ள மலைப்பாம்பு எவ்வித அசைவின்றி படுத்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடுமையான குளிரின் காரணமாக அசைவின்றி கிடக்கிறதா அல்லது வாகனம் ஏறியதால் இறந்து கிடக்கிறதா என்பதை பொலிசாரால் உறுதி செய்ய முடியவில்லை.
உடனடியாக மருத்துவர் வரவழைக்கப்பட்ட சோதனை செய்தபோது, அந்த மலைப்பாம்பு ஏற்கனவே உயிரிழந்துள்ளதை மருத்துவர் கண்டுபிடித்துள்ளார்.
ஆனால், 4 மீற்றர் நீளமுள்ள இந்த மலைப்பாம்பு மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு எப்படி வந்தது என்ற பொலிசாரின் கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.
ஜேர்மனி நாட்டில் மலைப்பாம்புகள் பாதுகாக்கப்பட வேண்டிய ஊர்வன விலங்குகள் என்பதால், இதனை வீட்டில் வளர்க்க முக்கிய அனுமதிகளை பெற வேண்டும்.
சாலையின் நடுவில் மலைப்பாம்பு இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, அப்பகுதில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
