பாரீஸில் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம்: பெரும் ஆபத்தை அதிரடியாக முறியடித்த பொலிசார்
பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Bernard Cazeneuve நேற்று பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘நேற்று மாலை 5.30 மணியளவில் பாரீஸிற்கு அருகே உள்ள Argenteuil என்ற பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ரகசிய தகவல்கள் வந்துள்ளன.
இதனை தொடர்ந்து பொலிசார் படையை அப்பகுதிக்கு அனுப்பி கண்காணித்ததில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்த நபர் பிரான்ஸ் நாட்டு குடிமகன் என்றும், இவரை பற்றி ஏற்கனவே உளவு நிறுவனங்களுக்கு தகவல் கிடைத்ததால், அவரை கடந்த சில வாரங்களாக ரகசியமாக கண்காணித்து வந்தோம்.
நேற்று மாலையில் தாக்குதல் உறுதியானதை தொடர்ந்து, காலதாமதம் ஏற்படுத்தாமல் அவரை சுற்றி வளைத்து கைது செய்துவிட்டதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபருக்கும் கடந்த நவம்பர் மாதம் பாரீஸில் நடந்த தாக்குதலுக்கும் அல்லது பிரஸ்சல்ஸில் நடந்த தாக்குதலுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து இதுவரை தெரியவரவில்லை.
கைது செய்யப்பட்டுள்ள நபரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருவதாக உள்துறை அமைச்சர் தகவல் அளித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
