பெற்ற தாய் மீது கார் ஏற்றி கொன்ற மகள்: காட்டிக் கொடுத்த கண்காணிப்பு கமெரா (வீடியோ இணைப்பு)
ரொறொன்ரோ நகரில் எலினோர் கேம்பெல்(65) என்ற தாயார் மீச்செல் கேம்பெல்(43) என்ற மகளுடன் வசித்து வந்துள்ளார்.
இருவருக்கும் குடும்ப விவகாரம் தொடர்பாக் பிரச்சனைகள் எழுந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இருவரும் காரில் அருகில் உள்ள Pelmo Park என்ற பகுதிக்கு சென்று அங்குள்ள தேனீர் கடையில் அமர்ந்து சிறிது நேரம் உரையாடியுள்ளனர்.
இந்தச் சூழலில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்திற்கு பின்னர் இருவரும் எழுந்து காரை நோக்கி சென்றுள்ளனர்.
ஆனால், தாயார் காரில் ஏற மறுத்துவிட்டு தனியாக சாலையில் நடந்து சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மகள் காரை எடுத்துக்கொண்டு வேகமாக சென்று தாயார் மீது மோதிவிட்டு பறந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் தாயார் அதே இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் பெற்று வந்த பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
தொடக்கத்தில் இது ஒரு விபத்தாக இருக்குமா என பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனினும், பொலிசார் இதனை உறுதிப்படுத்தவில்லை.
இந்நிலையில், சாலையில் இருந்த கண்காணிப்பு கமெராவை பொலிசார் சோதனை செய்தபோது, அதில் கார் ஒன்று அவர் மீது மோதிவிட்டு மிகச்சாதாரணமாக கடந்து சென்றதை கண்டு விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இதன் விளைவாக, வீட்டில் இருந்த மீச்செல்லை கண்டுபிடித்த பொலிசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.
மேலும், விசாரணைக்கு பிறகு மீச்செல் மீது நேற்று பொலிசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் அவரை விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் தொல்பொருட்களை பார்வையிட அலைமோதும் மக்கள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த திமுகவினர்
புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு.!
தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களின் வேகம் இன்று முதல் அதிகரிப்பு
ஆண்டின் முதல் சூரிய உதயத்தை காண கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
