சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க நூதன முயற்சியில் இறங்கும் பிரான்ஸ்
பிரான்ஸ் நாட்டில் உள்ள சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக அந்நாட்டு அரசாங்கம் நூதன முயற்சியில் இறங்கியுள்ளது.
உலகளவில் சிகரெட் பிடிப்பதனால் இறந்து போகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, இதனை கட்டுப்படுத்தும் செயலில் பல்வேறு நாடுகளும் இறங்கியுள்ளன.
இந்நிலையில் சிகரெட் உற்பத்தியை மேற்கொள்ளும் நிறுவனங்களின் முத்திரைகளோ, வண்ண நிறங்கள் இல்லாத பெட்டிகளில் மட்டுமே சிகரெட் விற்பனை செய்ய வேண்டும் என்ற அரசாணையை பிரான்ஸ் அரசு பிறப்பித்தது.
சிகரெட் பெட்டிகளின் அழகால் புகைப் பிடிப்போர் கவரப்படுவதைத் தவிர்க்கவும், புகைப் பிடிக்கும் பழக்கத்தைக் குறைக்கவும் இந்த உத்தரவை பிரான்ஸ் அரசு பிறப்பித்துள்ளது.
எனினும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாக "ஜப்பான் டொபாக்கோ இன்டர்நேஷனல்' நிறுவனத்தின் பிரான்ஸ் பிரிவு அறிவித்துள்ளது.
முன்னதாக இந்த திட்டம் தற்போது அவுஸ்திரேலியாவில் புழக்கத்தில் உள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு முதன்முதலாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது அந்நாட்டில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து பிரித்தானியா, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்த திட்டத்தை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
