ஜஸ்டின் ட்ரூடே தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்: பெற்றோர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்
கனடாவின் 23வது பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது.
இதில் லிபரல் கட்சியை சேர்ந்த ஜஸ்டின் ட்ரூடே அமோக வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்றார்.
பதவியேற்றபின் அகதிகள் தொடர்பான விடயம், சிரியா போர் மற்றும் நாட்டின் பொருளாதர நிலை ஆகியவை தொடர்பாக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
இந்நிலையில் ட்ரூடே தலைமையிலான ஆட்சியின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பில் மொர்னியூ (Bil Morneau) இதனை தாக்கல் செய்தார்.
கனடிய பொருளாதாரம் பெரும் சரிவில் உள்ள நிலையில் இந்த பட்ஜெட் அதனை தூக்கி நிறுத்தும் ஒன்றாக கூறப்படுகிறது.
மேலும் மத்திய மற்றும் கீழ் நிலையில் உள்ள கனெடிய மக்களின் வரிச்சுமையை குறைக்கும் வகையில் குழந்தைகளுக்கான திட்டத்தையும் இந்த பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை உடைய அனைத்து குடும்பத்தினருக்கும் இந்த திட்டம் பயனளிக்கும்.
இதன் மூலம் ஆண்டுக்கு 6 ஆயிரத்து 400 டொலர் வரை கனெடிய குடும்பத்தினர் பெறலாம். எனினும் ஆண்டு வருமானம் 30 ஆயிரம் டொலர்களை தாண்டினால் திட்டத்தின் பயன் அளவு குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 25 ஆயிரம் சிரிய அகதிகளுக்கு வாழிடம் வழங்க கனடா முடிவு செய்தது. இந்த பட்ஜெட்டின் மூலம் மேலும் 10 ஆயிரம் அகதிகளுக்கு வசிப்பிடம் வழங்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
அதே வேளையில் சுமார் 30 பில்லியன் டொலர் அளவிக்கு இந்த பட்ஜெட்டில் பற்றாக்குறை உள்ளது குறிப்பிடத்தக்கது.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
