பிரஸ்சல்ஸ் குண்டுவெடிப்பு எதிரொலி: பாரீஸ் முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு
பிரஸ்சல்ஸில் உள்ள Zaventem விமான நிலையம், Maalbeek மற்றும் Schuman ஆகிய இரு ரயில் நிலையங்களில் சில மணி நேரங்களுக்கு முன்னர் அடுத்தடுத்து 3 வெடிகுண்டு தாக்குதல்கள் நிகழ்ந்ததில் 32 பேர் பலியானதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் வெளியானதை தொடர்ந்து பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பிரஸ்சல்ஸ் நகரில் தாக்குதல் நடந்த சில நிமிடங்களில் பிரான்ஸ் அதிபரான பிராங்கோயிஸ் ஹாலண்டே, பிரதமர் மேன்னுவல் வால்ஸ், உள்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆகியவர்களை அழைத்து உடனடி ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனைக்கு பிறகு பாரீஸில் பாதுகாப்பில் உள்ள பொலிசாரை விட கூடுதலாக 1,600 பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக மக்கள் அதிகமாக கூடும் விமான நிலையங்கள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.
பாரீஸின் மிகப்பெரிய விமான நிலையமான Charles de Gaulle என்ற இடத்தில் கூடுதலாக 40 பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
மேலும், தகுந்த பயணச்சீட்டு இல்லாமல் வரும் நபர்களை ரயில் நிலையங்களில் அனுமதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாரீஸில் நவம்பர் மாதம் நடந்த தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய முக்கிய தீவிரவாதி பிரஸ்சல்ஸ் பொலிசாரால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
