பொலிசாரிடம் சிக்காமல் தப்பியபோது நிகழ்ந்த பயங்கரம்: லொறியில் மோதி பலியான 3 வாலிபர்கள்
ஜேர்மனி நாட்டில் பொலிசார் துரத்தியபோது தப்பிக்க நினைத்து அதிவேகத்தில் காரை ஓட்டிச்சென்று லொறி மீது மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
தெற்கு ஜேர்மனியில் உள்ள Stuttgart என்ற நகரில் இன்று அதிகாலை 2 மணியளவில் மெர்சிடஸ் என்ற உயர் ரக காரில் 3 வாலிபர்கள் அதிவேகத்தில் சென்றுள்ளனர்.
அப்போது, சில மைல்கள் தூரத்தில் பொலிசாரின் சோதனை மையம் ஒன்று அமைந்துள்ளது. ஆனால், இதனை பார்த்த வாலிபர்கள் காரை நிறுத்தாமல் தடுப்புக்களை உடைத்துக்கொண்டு சென்றுள்ளனர்.
வாலிபர்களின் செயலால் சந்தேகம் அடைந்த பொலிசார் உடனடியாக அந்த காரை விரட்டிச் சென்றுள்ளனர்.
சில நிமிடங்களாக சினிமா பாணியில் இந்த துரத்தல் காட்சிகள் அரங்கேறியுள்ளது.
அப்போது, சாலையின் ஓரத்தில் கார்களை ஏற்றிச் செல்லும் நீளமான லொறி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதனை கண நேரத்தில் கவனிக்காத கார் ஓட்டுனர் லொறி மீதி பயங்கரமாக மோதியதில் பல மீற்றர்கள் உருண்டுச் சென்றுள்ளது.
மணிக்கு சுமார் 100 கி.மீ வேகத்தில் கார் மோதியதில் கார் அப்பளம் போல் நொறுங்கி அதில் பயணித்த ஓட்டுனர் உட்பட 3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
மூவரின் சடலங்களையும் மீட்ட பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பொலிசாரை பார்த்து எதற்காக காரை நிறுத்தாமல் சென்றனர் என்ற கேள்விக்கு பதில் கிடைக்காததால், உயிரிழந்த வாலிபர்களின் தகவல்களை பொலிசார் சேகரித்து வருகின்றனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
