பொலிசாரிடம் சிக்காமல் தப்பியபோது நிகழ்ந்த பயங்கரம்: லொறியில் மோதி பலியான 3 வாலிபர்கள்
ஜேர்மனி நாட்டில் பொலிசார் துரத்தியபோது தப்பிக்க நினைத்து அதிவேகத்தில் காரை ஓட்டிச்சென்று லொறி மீது மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
தெற்கு ஜேர்மனியில் உள்ள Stuttgart என்ற நகரில் இன்று அதிகாலை 2 மணியளவில் மெர்சிடஸ் என்ற உயர் ரக காரில் 3 வாலிபர்கள் அதிவேகத்தில் சென்றுள்ளனர்.
அப்போது, சில மைல்கள் தூரத்தில் பொலிசாரின் சோதனை மையம் ஒன்று அமைந்துள்ளது. ஆனால், இதனை பார்த்த வாலிபர்கள் காரை நிறுத்தாமல் தடுப்புக்களை உடைத்துக்கொண்டு சென்றுள்ளனர்.
வாலிபர்களின் செயலால் சந்தேகம் அடைந்த பொலிசார் உடனடியாக அந்த காரை விரட்டிச் சென்றுள்ளனர்.
சில நிமிடங்களாக சினிமா பாணியில் இந்த துரத்தல் காட்சிகள் அரங்கேறியுள்ளது.
அப்போது, சாலையின் ஓரத்தில் கார்களை ஏற்றிச் செல்லும் நீளமான லொறி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதனை கண நேரத்தில் கவனிக்காத கார் ஓட்டுனர் லொறி மீதி பயங்கரமாக மோதியதில் பல மீற்றர்கள் உருண்டுச் சென்றுள்ளது.
மணிக்கு சுமார் 100 கி.மீ வேகத்தில் கார் மோதியதில் கார் அப்பளம் போல் நொறுங்கி அதில் பயணித்த ஓட்டுனர் உட்பட 3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
மூவரின் சடலங்களையும் மீட்ட பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பொலிசாரை பார்த்து எதற்காக காரை நிறுத்தாமல் சென்றனர் என்ற கேள்விக்கு பதில் கிடைக்காததால், உயிரிழந்த வாலிபர்களின் தகவல்களை பொலிசார் சேகரித்து வருகின்றனர்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
