கொசோவோ பிரதமரின் சகோதரர் ஜேர்மனியில் புகலிடம் கோரினாரா? வெளியான பரபரப்பு தகவல்கள்
ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஏழை நாடுகளில் கொசோவோ நாடும் ஒன்று. இந்த நாட்டிற்கு Isa Mustafa என்பவர் பிரதமராக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், பிரதமரின் உடன் பிறந்த சகோதரரான Ragip Mustafa என்பவர் ஜேர்மனிக்குள் சட்டவிரோதமாக நுழைந்து அங்குள்ள Rheinland-Pfalz என்ற மாகாணத்தில் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
Insajderi.com என்ற செய்தி இணையத்தளம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், ‘கடந்தாண்டு யூன் 24ம் திகதி கொசோவோ நாட்டு பிரதமரின் சகோதரர் ஜேர்மனியில் புகலிடம் கேட்டு விண்ணப்பம் செய்தார்.
இந்த தகவலை பிரதமரே தனது பேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுமட்டுமில்லாமல், மற்ற அகதிகளை போல் பிரதமரின் சகோதரரும் சட்டவிரோதமாகவே ஜேர்மனிக்குள் நுழைந்ததாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.
வெளியாகியுள்ள இந்த தகவலையும் கொசோவோ நாட்டு பிரதமர் உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு தகவலையும் வெளியிட்டுள்ளார்.
அதில், ‘எனது சகோதரர் ஒரு மோசமான வியாதியால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இந்த வியாதியை கொசோவோ நாட்டில் குணப்படுத்த முடியாது என்பதால் தான் அவர் ஜேர்மனியில் சிகிச்சை பெற்றுக் கொள்ள புகலிடம் கோரியதாக’ உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரதமரின் சகோதரர் ஜேர்மனி நாட்டிற்குள் வரவதற்கு முன்னதாக பிரான்ஸ் நாட்டில் புகலிடம் கோரியதாகவும், அங்கு புகலிடம் மறுக்கப்பட்டதால் ஜேர்மனிக்கு சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனினும், கொசோவோ நாட்டு பிரதமரின் சகோதரருக்கு ஜேர்மனி அரசு புகலிடம் வழங்கியதா அல்லது நிராகரித்ததா என்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்
நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
