பாரீஸ் தாக்குதலில் கைதான தீவிரவாதி செய்த முதல் குற்றம் என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்
பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் நடத்திய தீவிரவாத தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்ட சம்பத்தில் Salah Abdeslam என்ற முக்கிய குற்றவாளி கடந்த வெள்ளிக்கிழமை பிரஸ்சல்ஸ் நாட்டில் கைது செய்யப்பட்டான்.
தற்போது ரகசிய இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ள இவரது பின்னணி தொடர்பான பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
26 வயதான சாலா, 1989ம் ஆண்டு செப்டம்பர் 15ம் திகதி பிரஸ்சல்ஸில் பிறந்தவர். இவருக்கு Mohammad மற்றும் Brahim என இரு மூத்த சகோதரர்கள் உள்ளனர்.
சிறு வயது முதலே கால்பந்தாட்டத்தில் அதிக ஆர்வம் கொண்ட சாலா, தனக்கு 18 வயதானபோது ஒரு பெண்ணை காதல் செய்து பின்னர் பிரிந்துள்ளனர்.
உள்ளூரில் பல குற்றங்களில் ஈடுப்பட்டு வந்த தனது சகோதரரான பிராஹிமுடன் இணைந்து இவரும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.
முதன் முதலாக திருட்டு குற்றத்தில் ஈடுப்பட்டு, பின்னர் போதை பொருள் கடத்துவது, ஆள் மாறாட்டம் மற்றும் பணமோசடி என பல குற்றங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.
சில குற்றங்களுக்காக 2010 முதல் 2011 வரை சிறை தண்டனையும் பெற்றவர் ஆவார்.
இவ்வாறு பல்வேறு குற்றங்களில் ஈடுப்பட்டு வந்து பின்னர் ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் சேர்ந்து பல்வேறு தாக்குதல்களில் ஈடுப்பட்டுள்ளது இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாரீஸில் தாக்குதல் நடத்தியுள்ளதால், அந்நாட்டிற்கு செல்வதை அவர் விரும்பவில்லை என தெரிகிறது.
வழக்கறிஞர் ஒருவரை நியமித்துள்ள சாலா, இறுதி வரை பிரஸ்சல்ஸ் நகரிலேயே இருக்க தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
