கடத்தல் கும்பல் தலைவனுக்கு மர்ம நபர்கள் வைத்த குறி: தவறுதலாக உயிரிழந்த கார் ஓட்டுனர்
ஜேர்மனியில் தலைநகரான பெர்லினில் கடந்த செவ்வாக்கிழமை அன்று சாலையில் சென்றுகொண்டு இருந்த கார் ஒன்று திடீரென வெடித்து சிதறியதில் அதை ஓட்டிச் சென்ற Mesut T என்ற ஓட்டுனர் உடல் சிதைந்து பலியாயினர்.
தலைநகரில் நடைபெற்ற இந்த பயங்கர சம்பவம் பொலிசாரை நிலைகுலைய வைத்ததை தொடர்ந்து, ‘இது தீவிரவாத தாக்குதலாக இருக்குமா’? என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினர்.
ஆனால், நேற்று பொலிசார் முற்றிலும் ஒரு மாறுப்பட்ட காரணத்தை வெளியிட்டுள்ளனர்.
அதில், ‘இது தீவிரவாத தாக்குதலாக இருக்க முடியாது. வெடித்து சிதறிய காரில் இருந்து ரஷ்ய நாட்டை சேர்ந்த ஒரு நபரின் ஆவணங்கள் சிக்கியுள்ளது.
இந்த கும்பல் போதை பொருள்களை விலைபேசுவதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இந்த ரஷ்ய நபரை தீர்த்துக்கட்ட மர்ம நபர்கள் சிலர் காரில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
ஆனால், இந்த வெடிகுண்டு தாக்குதலில் எந்த தவறும் செய்யாத கார் ஓட்டுனர் பலியாகியுள்ளார். ஓட்டுனரும் ஒரு காலத்தில் போதை பொருள் கடத்திலில் தொடர்பில் இருந்துள்ளார்.
ஆனால் 2008ம் ஆண்டுக்கு பிறகு அவர் எந்த குற்றங்களிலும் ஈடுப்படவில்லை என தெரியவந்துள்ளது.
இந்த போதை பொருள் கடத்தல் சம்வங்கள் 2015ம் ஆண்டின் இறுதியில் நடைபெற்று இருக்கலாம்.
இதில் முக்கிய கடத்தல் தலைவன் ஏமாற்றவோ அல்லது கூட்டாளிகளுக்கு எதிராக செயல்பட்டதால், அவரை கொலை செய்ய இந்த தாக்குதல் நடந்து இருக்கலாம் என்பதால் அந்த கோணத்தில் விசாரணையை நடத்தி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
