கடத்தல் கும்பல் தலைவனுக்கு மர்ம நபர்கள் வைத்த குறி: தவறுதலாக உயிரிழந்த கார் ஓட்டுனர்
ஜேர்மனியில் தலைநகரான பெர்லினில் கடந்த செவ்வாக்கிழமை அன்று சாலையில் சென்றுகொண்டு இருந்த கார் ஒன்று திடீரென வெடித்து சிதறியதில் அதை ஓட்டிச் சென்ற Mesut T என்ற ஓட்டுனர் உடல் சிதைந்து பலியாயினர்.
தலைநகரில் நடைபெற்ற இந்த பயங்கர சம்பவம் பொலிசாரை நிலைகுலைய வைத்ததை தொடர்ந்து, ‘இது தீவிரவாத தாக்குதலாக இருக்குமா’? என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினர்.
ஆனால், நேற்று பொலிசார் முற்றிலும் ஒரு மாறுப்பட்ட காரணத்தை வெளியிட்டுள்ளனர்.
அதில், ‘இது தீவிரவாத தாக்குதலாக இருக்க முடியாது. வெடித்து சிதறிய காரில் இருந்து ரஷ்ய நாட்டை சேர்ந்த ஒரு நபரின் ஆவணங்கள் சிக்கியுள்ளது.
இந்த கும்பல் போதை பொருள்களை விலைபேசுவதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இந்த ரஷ்ய நபரை தீர்த்துக்கட்ட மர்ம நபர்கள் சிலர் காரில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
ஆனால், இந்த வெடிகுண்டு தாக்குதலில் எந்த தவறும் செய்யாத கார் ஓட்டுனர் பலியாகியுள்ளார். ஓட்டுனரும் ஒரு காலத்தில் போதை பொருள் கடத்திலில் தொடர்பில் இருந்துள்ளார்.
ஆனால் 2008ம் ஆண்டுக்கு பிறகு அவர் எந்த குற்றங்களிலும் ஈடுப்படவில்லை என தெரியவந்துள்ளது.
இந்த போதை பொருள் கடத்தல் சம்வங்கள் 2015ம் ஆண்டின் இறுதியில் நடைபெற்று இருக்கலாம்.
இதில் முக்கிய கடத்தல் தலைவன் ஏமாற்றவோ அல்லது கூட்டாளிகளுக்கு எதிராக செயல்பட்டதால், அவரை கொலை செய்ய இந்த தாக்குதல் நடந்து இருக்கலாம் என்பதால் அந்த கோணத்தில் விசாரணையை நடத்தி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
