குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து: குழந்தைகள் உட்பட 6 பேர் காயம்
கனடாவின் மார்க்கம் பகுதியில் உள்ள Steeles அவெனியு மற்றும் மக்கோவான் வீதி, டக்ளஸ் ஹெயிக் டிரைவில் உள்ள வீடொன்றில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.
3 குழந்தைகள், பெண் ஒருவர் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதில் முதியவர் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதாவது, முதலில் புகை மூட்டம் மட்டுமே ஏற்பட்டது. பின்னர் மீண்டும் எதோ வெடிப்பது போன்ற சத்தம் கேட்டது.
அதன் பின்னர் தீ கொளுந்துவிட்டு எரியத்தொடங்கியது என்று தெரிவித்துள்ளனர்.
இந்த தீச்சுவாலைக்கான காரணம் தெரிய வரவில்லை. இது தொடர்பாக ஒன்ராறியோ தீயணைப்பு அதிகாரி விசாரனையில் ஈடுபட்டுள்ளார்.
இப்பகுதியில் தமிழர்கள் அதிகமாக வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
