ஐ.நா.பாதுகாப்பு மன்ற நிரந்தர உறுப்பினர்: இந்தியா ஆலோசனை
புதுடில்லி, மார்ச். 5-
ஐ.நா.பாதுகாப்பு மன்றத்தில் நிரந்தர உறுப்பினராக மேற்கொள்ள வேண்டிய அணுமுறைகள் குறித்து தலைநகர் புதுடில்லியில் இந்தியா உள்ளிட்ட ஜி-4 நாடுகளின் பிரதிநிதிகள் ஆலோசனை நடத்தினர்.ஐ.நா. விவகாரங்களுக்கான பொது இயக்குநர்கள் மற்றும் இந்தியா, பிரேசில், ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் ஐ.நா.வுக்கான பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். அப்போது ஐ.நா.பாதுகாப்பு பாதுகாப்பு மன்ற நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு ஜி-4 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவு தெரிவித்தனர். ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் சையது அக்பரூதின் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு இந்தியா சார்பில் கருத்துக்களை வலியுறுத்தினார்.அடுத்த சந்திப்பினை வருகிற ஜூன் மாதம் ஜப்பானில் நடத்த அனைத்து நாடுகளின் பொது இயக்குநர்களும் ஒப்புதல் அளித்தனர்.ஐ.நா.பாதுகாப்பு மன்றத்தில் தற்போது அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பை விரிவுப்படுத்தி, நிரந்தர உறுப்பினராக ஆவதற்கு இந்தியா, பிரேசில், ஜப்பான், ஜெர்மனி ஆகிய 4 நாடுகள் முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
