முகிதின், ஷாபி, முக்ரிஷை நீக்காவிடில் மீண்டும் அம்னோ இரண்டாக உடையுமா?
கோலாலம்பூர், மார்ச் 4-
சர்ச்சைக்குரிய டான்ஶ்ரீ மொகிதின் யாசின், டத்தோஶ்ரீ ஷாபி அப்டால், மற்றும் டத்தொஶ்ரீ முக்ரிஷ் மகாதீர் ஆகிய மூவரையும் தொடர்ந்து கட்சிக்குள் வைத்திருந்தால், 1987-இல் ஏற்பட்டது போன்ற சூழல் உருவாகி, அம்னோ மிகப்பெரிய அளவில் பிளவுபடும் என்று அம்னோ ஆதரவு இணைய செய்தித் தளம் எச்சரித்திருக்கிறது.
இவர்கள் மூவரையும் நீக்காவிட்டால், மீண்டும் கட்சிக்குள் ஏ-டீம், பி-டீம் போராட்டம் ஏற்படும் என்று அது தெரிவித்தது.
இவர்களால் கட்சி உடைந்து விடும். ‘தொல்லை தரும் இளைஞர்” (டாக்டர் மகாதீர்) மீண்டும் ஒரு ‘சதி மூளை’யாக வேலை செய்யவிருக்கிறார் என்று அது கூறியது.
1987ஆம் ஆண்டில், அம்னோ பிளவுபட்டு ஏ-டீம், பி-டீம் என இரண்டானது என்பது குறிப்பிடத்தக்கது. அதில், ஏ-டீமிற்கு மகாதீரும் பி-டீமிற்கு துங்கு ரசாலியும் தலைமையேற்று கட்சித் தேர்தலில் போட்டியிட்டதில் மகாதீர் வென்றார். எனினும், தேர்தல் முடிவு தொடர்பான சர்ச்சை, நீதிமன்றம் வரை சென்று பின்னர் அம்னோ பதிவு ரத்தானது.
இதே நிலைமை இப்போது திரும்புகிறது. முகிதின், ஷாபி, முக்ரிஷ் ஆகியோர், கட்சியைக் கைப்பற்றுவதற்காக பிரதமர் நஜிப்பை எதிர்க்கத் திட்டமிட்டு வருகின்றனர் என்று ‘மை-கேஎம்யு’ என்ற அந்த அம்னோ ஆதரவு இணையத் தளம் கூறியது.




சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
காங். மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து 3 பேரை மிதித்து கொன்ற காட்டு யானை.!
மகாமேளா தொடங்கியது... பிரயாக்ராஜில் கடும் குளிரிலும் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்
‘இன்றைய இந்தியா தனது கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறது' - ராஜ்நாத் சிங்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு அனுமதி இலவசம்
நாகப்ப படையாட்சியாரின் அடையாளத்தை அழிக்க திமுக அரசு முயற்சி - அன்புமணி கண்டனம்
பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து
தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
மழை இல்லாததால் வைகை அணை நீர்மட்டம் 48 அடியாக சரிவு
