“எதிர்க்கட்சியுடனும் சேர்ந்து செயல்படத் தயார்!”– துன் மகாதீர்
கோலாலம்பூர், மார்ச், 3-
நாட்டின் நலனுக்கு அவசியம் என்றால் எதிர்க்கட்சியுடன் கூட சேர்ந்து செயல்பட தாம் விரும்புவதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்துள்ளார்.
“நான் யாருடனும் இணைந்து பணி செய்திருக்கிறேன். நாட்டின் நலனுக்கு உகந்தது என்றால் எதிர்க்கட்சியுடனும் நான் வேலை செய்வேன்” என்று அவர் சொன்னார்.
எதிர்காலத்தில், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான அன்வார் இப்ராகிமுடன் சேர்ந்து அரசியலில் பணிபுரிவது பற்றி பரிசீலிப்பீர்களா? என்று புளூம்பெர்க் டிவி தனது நேர்காணலில் கேள்வியெழுப்பிய போது மகாதீர் மேற்கண்ட பதிலை அளித்தார்.
அடுத்து 2018ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி வெல்லும் சாத்தியம் இருப்பதாக துன் மகாதீர் கூறினார்.
“நீங்கள் பாரிசானை ஆதரிக்கவில்லை என்றால், நிச்சயமாக, எதிர்க்கட்சி இயல்பாகவே ஜெயித்துவிடும்” என்றார் அவர்.
நஜிப் தொடர்ந்து பிரதமராக நீடிப்பாரேயானால், அடுத்து வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தோற்கும் அபாயம் இருக்கிறது எனத் தாம் இன்னமும் கருதுவதாக அவர் தெரிவித்தார்.
1எம்டிபி நிறுவனம் தொடர்பான விசாரணை மீண்டும் தொடங்கப்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், தம்முடைய தனிப்பட்ட வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ள பணம், ஒரு நன்கொடை தான் என்கிற நஜிப்பின் வாதத்தை மகாதீர் நிராகரித்தார். அப்படியொரு கூற்றுக்கு ஆவண ரீதியிலான ஆதாரங்கள் அவசியம் என்றார் அவர்




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
