கர்ப்பிணி மனைவியை பார்த்து ரசித்த இறந்து போன கணவன்! அழகான நினைவுகள்
இந்த புகைப்படங்களை பற்றி கூறுவதற்கு வார்தைகள் போதவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரை சேர்ந்த Nicole Bennett என்ற பெண்ணுக்கு Landen(4) என்ற மகன் உள்ளான்.
இந்நிலையில் இரண்டாவது குழந்தைக்கு கருவுற்றிருந்த நிக்கோலுக்கு மார்ச் 25 ஆம் திகதி பிரவச திகதி கூறப்பட்டிருந்தது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் நிக்கோலின் கணவர் இறந்துவிட்டார்.
இறந்துபோன கணவருக்கு, தனது மனைவியின் கர்ப்பகாலத்தினை புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது, இந்நிலையில் இந்த ஆசையை நிறைவேற்றும் விதமாகவும், தனது மகன் மற்றும் பிறக்கவிருக்கும் மகள் ஆகிய இருவரும் தங்களது தந்தையை மறக்ககூடாது என்ற நோக்கில், சமீபத்தில் விதவிதமான புகைப்படங்களை எடுத்துள்ளார்.
அந்த புகைப்படத்தில் நிக்கோல் தனது 4 வயது மகனுடன் நடந்து செல்கிறார், இவர்களுடன் சேர்ந்து இறந்துபோன கணவரும் நிக்கோலின் கையை பிடித்துக்கொண்டு நடந்து வருகிறார்.
மேலும், இறந்து போன கணவர், தனது மனைவி மற்றும் மகனின் அருகில் அமர்ந்திருப்பது, இவர்களை பார்த்து ரசிப்பது என டிஜிட்டல் முறையில் இந்த புகைப்படங்கள் எடிட் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து நிக்கோல் கூறியதாவது, இந்த புகைப்படங்கள் எனது மகனுக்கு அழகான நினைவுகளை ஏற்படுத்தும், மேலும் பிறக்கவிருக்கும் எனது மகளும் தனது தந்தைய அடையாளம் கண்டுகொள்வாள் என்று கூறியுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
