கடலுக்கு அடியில் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளும் புதுமணத் தம்பதிகள்: அதிகரிக்கும் விநோத கலாச்சாரம் (வீடியோ இணைப்பு)
திருமணம் என்பது அனைவரது வாழ்க்கையிலும் ஒரு முக்கிய நிகழ்வாகும். பெரும்பாலான புதுமணத்தம்பதிகள் தங்களின் திருமண நிகழ்வை என்றும் மறக்கமுடியாத பசுமையான நிகழ்வாக மாற்றுவதற்காக பல புதுமைகளை கடைபிடிக்கின்றனர்.
விமானத்தில் திருமணம் செய்துகொள்வது, நடுக்கடலுக்கு சென்று கப்பலில் திருமணம் செய்துகொள்வது என புது முயற்சிகளையில் மேற்கொள்கின்றனர்.
அந்த வகையில் திருமணத்துக்கு அடுத்த நாள் கடலுக்கு அடியில் சென்று புகைப்படம் எடுத்துக்கொள்ளும் பழக்கம் புதுமணத்தம்பதிகளிடம் அதிகரித்துள்ளது.
த்ராஷ் தி டிரஸ் (Trash the Dress) என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த புகைப்படம் எடுக்கும் நிகழ்வை அவுஸ்திரேலியாவை சேர்ந்த பல புதுமணத் தம்பதிகள் மேற்கொள்கின்றனர்.
திருமணத்தற்கு அடுத்த நாள் மதியம் புத்தாடைகள் அணிந்தபடி கடற்கரைக்கு செல்லும் அவர்கள் கடற்கரை மணலிலும், கடலுக்கு அடியிலும் சென்று புகைப்படங்கள் எடுத்துகொள்கின்றனர்.
இது குறித்து புகைப்படக்காரர் பேஸ் என்பவர் கூறியதாவது, மக்கள் நடமாட்டம் இல்லாத கடற்கரைகளிலேயே இது போன்ற புகைப்பட நிகழ்வுகளை மேற்கொள்கிறோம்.
இதன் மூலம் எத்தகைய நெருக்கடியும் இல்லாமல் புதுமணத் தம்பதிகளால் இருக்க முடிகிறது. ஒரு மணி நேரத்தில் இந்த புகைப்பட நிகழ்வு முடிந்துவிடும்.
தம்பதிகளுக்கு இது மிகவும் மகிழ்ச்சியான தருணமாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பல்வேறு தம்பதிகள் தங்களின் திருமணத்தையே கடலுக்கு அடியில் நடத்த முயற்சி செய்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
