நூலகம் கோரிய மாணவியை வைத்தே திறப்பு விழா செய்த எம்.எல்.ஏ
சென்னை, மார்ச் 1- பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நூலகத்தைத் திறக்க கோரி மனு தந்த மாணவியைக் கௌரவிக்கும் வகையில் அம்மாணவியையே நூலகத்தை திறப்பு விழா செய்ய வைத்தார் குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. இச்செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தொகுதியில் உள்ள கிராமத்திற்கு வந்த திமுக எம்.எல்.ஏ எஸ்.எஸ்.சிவசங்கரிடம் அப்போது 8ம் வகுப்பு படித்த மாணவி செம்பருத்தி, கட்டப்பட்டு திறக்கப்படாமல் இருக்கும் நூலகத்தைத் திறக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அதனைப் பற்றி விசாரித்தபோது அந்த தூலகம் தனியார் கட்டத்தில் உள்ளதால் திறப்பதில் சிரமம் உள்ளதை அறிந்தார்.
இதன் பின்னர், அவர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கி கிளை நூலகம் ஒன்றை அமைத்தார்.
இந்த நூலகம் நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது. நூலகத்திற்கு கோரிக்கை விடுத்த செம்பருத்தியை வைத்தே திறப்பு விழா செய்தார் எம்.எல்.ஏ. அதோடு, அம்மாணவியின் பெயரை கல்வெட்டிலும் பதிய செய்துள்ளார்.
இவரின் இச்செயல் அவ்வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
