நடிகை ரோஜா மகாமக குளத்தில் நீராடினார்
சென்னை, பிப்.23-
நடிகை ரோஜா கும்பகோணத்தில் உள்ள மகாமக குளத்தில் கணவருடன் சென்று புனித நீராடினார். நடிகையும் எம்.எல்.ஏவுமான ரோஜா தன் கணவர் ஆர்.கே.செல்வமணியுடன் மகாமக விழாவிற்காக கும்பகோணம் வந்தார்.
இருவரும் புனித நீராடியப் பின் ஆதிகும்பேஸ்வரர் கோயிலுக்கு வழிப்பட சென்றனர். அவரின் வருகை அறிந்த கோவில் நிர்வாகத்தினர் அவரை பாதுகாப்பு வழங்கி சன்னதிக்கு அழைத்து சென்றனர்.