மன்.சிட்டி பரிதாபத் தோல்வி: செல்சீ 5-1இல் வென்றது!
மன்செஸ்ட்டர், பிப்.22-
எப்.ஏ.கிண்ண கால்பந்துப் போட்டியில் மன்செஸ்ட்டர் சிட்டி குழு 5-1 என்ற கோல் கணக்கில் செல்சீயிடம் பரிதாபகரமாகத் தோல்வி கண்டது.
வழக்கத்திற்கு மாறாக, மன்.சிட்டி, தனது முன்னணி ஆட்டக்காரர்கள் சிலருக்கு ஓய்வு கொடுத்து விட்டு, இரண்டாந்தரக் குழுவைக் களத்தில் இறக்கியதே இந்தத் தோல்விக்குக் காரணம் என்று வர்ணிக்கப்பட்டது.
ஆட்டத்தின் முற்பகுதியில் 35ஆவது நிமிடத்தில் செல்சீ வீர்ர் டியாகோ கோஸ்டா முதலில் கோல் அடித்தார் என்றாலும், உடனடியாக மன்.சிட்டி வீர்ர் டேவிட் பவ்பலா ஒரு கோலைப் போட்டு ஆட்டத்தை சம்மாக்கினார்.
பிற்பகுதி ஆட்டம் தொடங்கிய பின்னர், செல்சீ முழு வீச்சில் விளையாடியது. வில்லியன் (48ஆவது நிமிடம்), கெர்ரி காஹில் (53ஆவது நிமிடம்), எடென் ஹஷார்டு (67ஆவது நிமிடம்), மற்றும் டிராவ்ரே (89ஆவது நிமிடம்), ஆகியோர் தொடர்ந்து கோல்களை அடித்து செல்சீக்கு அபார வெற்றியைத் தேடித் தந்தனர்.
இந்த வெற்றியின் வழி, செல்சீ எப்.ஏ. கிண்ண காலிறுதி ஆட்டத்திற்குத் தேர்வு பெற்றுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
