தோல்வியில் முடிந்த போராட்டம்: ஒரு வயது குழந்தையை அகதிகள் முகாமிற்கு அனுப்பு உத்தரவு
நவ்ரூ தீவிலுள்ள அகதிகள் முகாமில் புலம்பெயர்ந்த பெற்றோர்களுடன் ஒரு வயதான ஆஷா என்ற பெண் குழந்தை வசித்து வந்துள்ளது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் சமையல் செய்தபோது முகாமில் ஏற்பட்ட தீவிபத்தில் ஆஷாவின் உடலில் தீக்காயம் ஏற்பட்டு அவுஸ்திரேலியாவில் உள்ள Brisbane's Lady Cilento மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
எனினும், குழந்தையை உடனடியாக முகாமிற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என அரசு உத்தரவிட்டும், குழந்தையின் உடல்நலன் காரணமாக மருத்துவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்தனர்.
இந்த விவகாரம் அவுஸ்திரேலியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்துள்ளது.
இந்நிலையில், அரசின் கோரிக்கையை ஏற்ற மருத்துவர்கள் இன்று ஆஷாவை மருத்துவமனையில் இருந்து வெளியேறி அனுமதி அளித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து குழந்தையை பெற்றோருடன் சந்திக்க மறுத்த குடியமர்வு துறை அதிகாரிகள், ஆஷாவை அங்குள்ள சமூக பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், குழந்தையின் உடல்நலன் பூரணக்குணமடைந்த உடனே நவ்ரூ அகதிகள் முகாமிற்கு திருப்பி அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து குடியமர்வு துறை அமைச்சரான பீற்றர் துட்டான், ‘அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெறும் நோக்கில் மருத்துவமனைகள் மூலமாக முயற்சிகள் மேற்கொண்டால், அதற்கு அரசு ஒருபோதும் அனுமதி அளிக்காது’ என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
