லெய்செஸ்ட்டரின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி! அர்சனல் வாகை சூடியது!
லண்டன், பிப்.15-
பிரிமியர் லீக்கின் முன்னணிக் குழுக்களான அர்சனலுக்கும் லெய்செஸ்ட்டர் சிட்டிக்கும் இடையே ஆட்டத்தில், கடைசி நிமிடத்தில் வெற்றிக் கோலை அடித்து அர்சனல் வாகைசூடியது.
இந்த ஆட்ட்த்தில் லெய்செஸ்ட்டர் சிட்டி வென்றிருக்குமேயானால், அக்குழு பிரிமியர் லீக் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமடைந்திருக்கும்.
ஆனால், 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்ந்ததால், இப்போது பிரிமியர் சாம்பியன் பட்டத்திற்கான போட்டா போட்டி பரவலாகி விட்டது. லெய்செஸ்ட்டர் சிட்டி, அர்சனல், டோட்டன்ஹாம் மற்றும் மன்.சிட்டி ஆகிய 4 குழுக்களுக்கு இடையிலான போட்டியாக அது மாறியிருக்கிறது.
அர்சனலுக்கு எதிரான ஆட்டத்தில், 45ஆவது நிமிடத்தில் லெய்செஸ்ட்டர் முதல் கோலைப் போட்டு சொந்த அரங்கில் கூடியிருந்த அர்சனல் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிற்பகுதி ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் லெய்செஸ்ட்டர் வீரர் டான்னி சிம்ப்சன் நடுவரால் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டதால் அக்குழு பெரியும் பலவீனப்பட்டது.
இந்நிலையில், மிகத் தீவிரமாகப் போராடிய அர்சனல், 79ஆவது நிமிடத்தில் அதிவேக வீர்ர் தியோ வால்கோட் மூலம் ஒரு கோலை அடித்து ஆட்டத்தை சம்மாக்கியது.
சமநிலை காணும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நிமிடத்தில் அர்சனல் வீர்ர் டான்னி வெல்பேக் வெற்றிக் கோலைப் போட்ட போது லெய்செஸ்ட்டர் வீர்ர்கள் நிலைகுலைந்து போயினர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
