முதலிடத்தில் மீண்டும் பில் கேட்ஸ்
போர்ப்ஸ் பத்திரிகையை போலவே உலகின் செல்வந்தர்களை தரவரிசைப்படுத்தும் வெல்த்-எக்ஸ் (Wealth-X) இணையதளம் சொத்துகள், முதலீடு, லாபம் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் ஆண்டுதோறும் உலகின் பெரும் செல்வந்தர்களை தரவரிசைப்படுத்தி பட்டியல் வெளியிட்டு வருகின்றது.
அவ்வகையில், இந்த ஆண்டின் பட்டியலுக்காக சுமார் ஒரு லட்சம் தொழிலதிபர்களின் பொருளாதார நிலையை சீராய்வு செய்த வகையில் 87.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் மைக்ரோசாப்ட் நிறுவன அதிபர் பில் கேட்ஸ் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஆயத்த ஆடைகள் தயாரிப்பு நிறுவன உரிமையாளரான அமனிக்கோ ஆர்ட்டெகா 66.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்தையும், 60.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் முதலீட்டு நிறுவன உரிமையாளரான வாரென் பஃபெட் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
இந்த பட்டியலில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க் 42.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் ஏழாம் இடத்திலும், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்டிவரும் பிளூம்பர்க் 42.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் ஒன்பதாம் இடத்திலும் உள்ளனர்.
பிரபல வால்மார்ட் சங்கிலித்தொடர் வணிக வளாகங்களின் உரிமையாளரான அலைஸ் வால்ட்டன் என்ற பெண் தொழிலதிபர் 33.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் பதினைந்தாம் இடத்தை பெற்றுள்ளார்.
6 total views, 6 views today




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
