காதலனை தற்கொலை செய்ய உத்தரவிட்டாரா அமெரிக்க யுவதி? எதிராக வழக்கு.
அமெரிக்காவைச் சேர்ந்த யுவதியொருவர் தனது காதலனை தற்கொலை செய்யுமாறு உத்தரவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். மசாசூசெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த 18 வயதான மிஷெல் கார்ட்டர் எனும் இந்த யுவதிக்கு எதிராக கைமோசக் கொலை வழக்கு விசாரணை நடைபெறுகிறது.
இவர் தனது காதலரான கொன்ராட் ரோய் எனும் இளைஞனை தற்கொலை செய்யுமாறு எழுத்து மூலம் உத்தரவிட்டிருந்தார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொன்ராட் ரோய் கடந்த 2014 ஜுலையில் காரொன்றில் இறந்துகிடந்தார். ரோயின் சடலத்துக்கு அருகிலிருந்து அவரின் தொலைபேசியை பொலிஸார் கண்டெடுத்தனர்.
இதன் மூலம் மைக்கல் கார்ட்டரின் உத்தரவு குறித்த விடயம் பொலிஸாருக்குத் தெரியவந்ததாம்.
மைக்கலும் ரோயும் சுமார் 50 மைல் தொலைவில் வசித்து வந்தவர்களாவர். இவர்கள் பெரும்பாலும் தொலைபேசி குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல் ஊடாக உரையாடி வந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, மிஷெல் கார்ட்டரின் சட்டத்தரணி வாதாடுகையில், இருவரும் தற்கொலை செய்வதற்கான திட்டத்தை கொன்ட்ராட் ரோயே முன்வைத்தார் எனத் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் 2 ஆம் திகதி மிஷெல் கார்ட்டர் நீதிமன்றில் ஆஜராகவுள்ளார்.
26 total views, 26 views today




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
