காதலனை தற்கொலை செய்ய உத்தரவிட்டாரா அமெரிக்க யுவதி? எதிராக வழக்கு.
அமெரிக்காவைச் சேர்ந்த யுவதியொருவர் தனது காதலனை தற்கொலை செய்யுமாறு உத்தரவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். மசாசூசெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த 18 வயதான மிஷெல் கார்ட்டர் எனும் இந்த யுவதிக்கு எதிராக கைமோசக் கொலை வழக்கு விசாரணை நடைபெறுகிறது.
இவர் தனது காதலரான கொன்ராட் ரோய் எனும் இளைஞனை தற்கொலை செய்யுமாறு எழுத்து மூலம் உத்தரவிட்டிருந்தார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொன்ராட் ரோய் கடந்த 2014 ஜுலையில் காரொன்றில் இறந்துகிடந்தார். ரோயின் சடலத்துக்கு அருகிலிருந்து அவரின் தொலைபேசியை பொலிஸார் கண்டெடுத்தனர்.
இதன் மூலம் மைக்கல் கார்ட்டரின் உத்தரவு குறித்த விடயம் பொலிஸாருக்குத் தெரியவந்ததாம்.
மைக்கலும் ரோயும் சுமார் 50 மைல் தொலைவில் வசித்து வந்தவர்களாவர். இவர்கள் பெரும்பாலும் தொலைபேசி குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல் ஊடாக உரையாடி வந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, மிஷெல் கார்ட்டரின் சட்டத்தரணி வாதாடுகையில், இருவரும் தற்கொலை செய்வதற்கான திட்டத்தை கொன்ட்ராட் ரோயே முன்வைத்தார் எனத் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் 2 ஆம் திகதி மிஷெல் கார்ட்டர் நீதிமன்றில் ஆஜராகவுள்ளார்.
26 total views, 26 views today