பாடசாலை துப்பாக்கி பிரயோகத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேகநபரை மன்னிக்க வேண்டும்: உயிரிழந்த சகோதரர்களின் பாட்டி –
கனடா சஸ்கட்சுவான் பாடசாலை துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த இரு சகோதரர்களினதும் பாட்டி, குற்றம் சாட்டப்பட்டுள்ள இளைஞரை மக்கள் மன்னிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை சஸ்கட்சுவான் லா லோச்சே பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றினுள் நுழைந்த துப்பாக்கிதாரி மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதலில் பாடசாலையின் இரு ஆசியர்கள் உள்ளிட்ட நால்வர் கொல்லப்பட்டனர். அத்துடன் மேலும் ஏழு பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தில் 17 மற்றும் 13 வயதுடைய சகோதர்களான டேய்ன் மற்றும் டிரேடென் ஃபோரெய்ன் ஆகியோரும் உயிரிழந்தனர். இவர்களது பாட்டி உள்ளூர் ஊடகம் ஒன்றுக்கு தெரிவிக்கையில், ‘ இது உண்மையில் மனவருத்தமான சம்பவம். லா லோச்சே மக்கள் அவரை (சந்தேகநபரை) மன்னிக்க வேண்டும். நானோ, அவரது தாய் தந்தையரோ இவ்வாறு செய்யுமாறு வற்புறுத்தவில்லை. எனவே எமது குடும்பத்தினரையும் இந்த சமூகம் மன்னிக்க வேண்டும். ‘ என தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட இரு சகோதரர்களின் பாட்டி சந்தேக நபருக்கு ஒருவகையின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது
119 total views, 119 views today




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
