எஸ்விஎஸ் கல்லூரி மாணவிகள் இறப்புக் குறித்து பாஜக சார்பில் உண்மை கண்டறியும் குழு: தமிழிசை
Tuesday, 26 January 2016 10:01
எஸ்விஎஸ் கல்லூரி மாணவிகள் இறப்புக் குறித்து பாஜக சார்பில் உண்மை கண்டறியும் குழு நியமிக்கப்பட்டு உள்ளது என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.
குடியரசு தின விழாவை முன்னிட்டு கட்சியில் தேசிய கொடியை ஏற்றிய தமிழிசை சவுந்திரராஜன், எஸ்விஎஸ் கல்லூரி மாணவிகளின் இறப்புக் குறித்து மாநில, மாவட்ட நிர்வாகங்கள் என்ன செய்து கொண்டு இருந்தன, இருக்கின்றன என்கிற வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும். அதோடு பட்டப் படிப்பு படிக்க வந்த மாணவர்களை கழிப்பறை கழுவவிட்ட கல்லூரி நிர்வாகம் மிகவும் கண்டிக்கத் தக்கது என்று கூறினார்.
உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்துக்கு தலா 25 லட்சம்ரூபாய் தமிழக அரசு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் தமிழிசை கோரிக்கை வைத்தார். அதோடு பாஜக சார்பில் எஸ்விஎஸ் கல்லூரி மாணவிகளின் இறப்பு குறித்து விசாரிக்க உண்மை கண்டறியும் குழு நியமிக்கப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
