காலம் உருவாக்கவில்லை என்றாலும் அந்த காலத்தை உருவாக்குவேன்: கருணாநிதி
Tuesday, 26 January 2016 09:28
எனக்கேற்ற காலத்தை காலம் உருவாக்கவில்லை என்றாலும் ,அந்த காலத்தை உருவாக்க எனக்குத் தெரியும் என்று, திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
திருவாரூரில் புதிய பள்ளிக் கட்டிட வளாகத்தை திறந்து வைத்து உரையாற்றினார் கருணாநிதி. அப்பள்ளியின் புதிய கட்டிட வளாகத்துக்கு தமது சொந்த நிதியிலிருந்து, நிதியுதவி கொடுத்ததாக கருணாநிதி கூறினார். இதுவரை இப்படி பல்வேறு விஷயங்களுக்கு 7 கோடியே 8 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் இதுவரை வழங்கப்பட்டு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
நான் என்ன செய்கிறோமோ அதைத்தான் காலம் தமக்கு திருப்பிக் கொடுக்கும் என்றும், சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த தாம், இப்போது விவசாயிகளைக் காக்கும் பொறுப்பு ஏற்கும் அளவுக்கு காலம் தம்மை அழைத்து வந்துள்ளது என்றும் கூறியுள்ளார் கருணாநிதி. மேலும், மக்களுக்கு வேண்டியதை செய்ய காலம் இடமளிக்கும் என்றும், அப்படி காலம் இடம் அளிக்கவில்லை என்றாலும், அந்த காலத்தை உருவாக்க எனக்குத் தெரியும் என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
