கடும் பனிப்புயலுக்கு முகம் கொடுத்த நியூயார்க் நகரம் இயல்பு நிலைக்கு திரும்புகிறது
அமெரிக்காவின் வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, ஜார்ஜியா, டென்னசி, பென்சில்வேனியா, கென்டகி, நியூஜெர்சி, நியூயார்க், வாஷிங்டன், மேற்கு வெர்ஜினியா மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்புயல் வீசியது. நியூயார்க் நகரில் கடந்த சனிக்கிழமை அதிக பட்சமாக 68 செ.மீட்டரும், வாஷிங்டன் நகரின் சர்வதேச விமான நிலைய பகுதியில் 74.2 செ.மீ பனியும் கொட்டியது. மேற்கு வெர்ஜினியா மாகாணத்தின் கிளெங்கரியில் நாட்டிலேயே மிக அதிக பட்சமாக 106.7 செ.மீ. பனிப்பொழிவு பதிவாகி இருந்தது.
வரலாறு காணாத இந்த கடும் பனிப்புயலுக்கு இதுவரை 20–க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். பனிப்பொழிவின் காரணமாக வாஷிங்டன் நகரில் சாலைகளில் வாகனங்களை இயக்க விதிக்கப்பட்ட தடை இன்னும் நீக்கப்படவில்லை. அங்கு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.
அதேநேரம் நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் ஓரளவு கடுமையான வெயில் அடித்ததால் அங்கு நிலைமை மெல்ல மெல்ல சீரடையத் தொடங்கியது. இதனால் உற்சாகம் அடைந்த நியூயார்க் நகரவாசிகள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியே வந்து பனிமூடிய தங்களது கார்களை வெளியே எடுத்தனர். மூடப்பட்டு இருந்த வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்களும் திறக்கப்பட்டன. மெட்ரோ ரெயில், பஸ் சேவைகள் வழக்கம்போல் இயங்கத் தொடங்கின.
எனினும் பல மாகாணங்களில் விமான போக்குவரத்து இன்னும் சீரடையவில்லை. நேற்று முன்தினம் 3,900 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. நேற்றும் 900 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. நியூயார்க் நகரின் ஜான் எப்.கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் மிகச் சொற்ப அளவிலேயே விமான சேவை இருந்தது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
