ஹைதராபாத் மாணவர் தற்கொலைக்கு குரல் கொடுத்த அரசியல்வாதிகள் இப்போது எங்கே?:எஸ்விஎஸ் மாணவர்கள்
Tuesday, 26 January 2016 08:40
ஹைதராபாத் மாணவர் தற்கொலையின் போது குரல் கொடுத்த அரசியல் வாதிகள் எங்களை கண்டுக்கொள்ளாமல் விட்டது ஏன் என்று, கள்ளக்குறிச்சி எஸ்விஎஸ் இயற்கை மருத்துவக் கல்லூரி தலித் மாணவர்கள் கேள்வி வைத்துள்ளனர்.
கடந்த வாரம் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள எஸ்விஎஸ் மருத்துவக் கல்லூரியில் படித்த 3 மாணவிகள் தற்கொலை செய்துக் கொண்டனர் என்று கூறப்பட்டது.இதையடுத்து மாணவிகள் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்கிற சந்தேகமும் வலுத்து வரும் நிலையில், தலைமறைவாக இருந்த கல்லூரி தாளாளர் நேற்று விழுப்புரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
இதுக்குறித்து சமூகத்தில் பலவேறு கருத்துக்கள் நிலவி வரும் நேரத்தில், அக்கல்லூரி தகுதிச் சான்றிதழ் பெறவில்லை என்று தகவல் வெளியானது. இதையடுத்து கல்லூரியில் நிர்கதியாக நிற்கும், 98 தலித் மாணவர்கள், அரசு
தேர்ந்து எடுத்துக் கொடுத்த கல்லூரியில் நாங்கள் பணம் கட்டிப் படிக்க சேர்ந்தோம். ஆனால், இங்கு கல்லூரியே பல் வேறு முறைகேடுகளுடன் இயங்கி வருகிறது.தலித் மாணவர்களாகிய நாங்கள் இப்போது நிர்கதியாக இருக்கிறோம். ஹைதராபாத் மாணவர் தற்கொலைக்கு குரல் கொடுத்த அரசியல் வாதிகள் எங்களது பிரச்சனையைக் கண்டு மவுனியாக நிற்பது ஏன் என்று கேள்வி எழுப்புகின்றனர்.
அதோடு ஊடகங்களும், பத்திரிகைகளும் கூட இந்த விவகாரத்தில் மவுனம் காக்கிறது என்றும், அரசியல் வாதிகள் ஆளுக்கொரு கல்லூரியை சொந்தமாக வைத்திருப்பதால்தான் இப்படி கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார்கள் என்றும், பத்திரிகைகள் தங்களது கல்வி மலருக்கு இதுப்போன்ற கல்லூரிகளை விளம்பரத்துக்காக நம்பி இருக்கிறார்கள், எனவேதான் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார்கள் என்றும் சர்ச்சை எழுந்துள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
