தீவிரவாதம் அகற்றப்பட வேண்டும்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேச்சு
பதிவு செய்த நாள் : 26, ஜனவரி 2016 (8:54 IST)
மாற்றம் செய்த நாள் :26, ஜனவரி 2016 (8:54 IST)
தீவிரவாதம் அகற்றப்பட வேண்டும்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேச்சு
இந்தியாவின் 67வது குடியரசு தின விழாவையொட்டி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாட்டு மக்களுக்கு குடியரசு தின உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறியதாவது:– 67வது குடியரசு தினத்தையொட்டி இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வாழும் இந்திய குடிமக்களுக்கும், நமது ராணுவப்படைகள், துணை ராணுவம், உள்நாட்டு பாதுகாப்பு படைகளுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
2015–ம் ஆண்டு இயற்கை நம்மை ஏமாற்றிவிட்டது. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டது. மற்ற பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. வழக்கத்துக்கு மாறான பருவநிலை நமது வேளாண் உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் பாதிக்கப்பட்டது.
இந்த ஆண்டு 7.3 சதவீத வளர்ச்சி இலக்குடன், இந்தியா பொருளாதாரத்தில் வேகமான வளர்ச்சி அடையும் நாடாக நிலைநிறுத்திக் கொள்ளும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள சரிவு வெளிநாட்டு வர்த்தகத்தில் நிலைத்தன்மையையும், உள்நாட்டில் விலைவாசியை கட்டுக்குள் வைக்கவும் உதவும். அதிக வளர்ச்சி விகிதத்தை அடையும் நிலையில் நம்மை நிலைநிறுத்திக் கொள்வது அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் வறுமையை ஒழிக்க உதவும்.
நமது நிலைநாட்டப்பெற்ற கோட்பாடுகளில் வன்முறை சம்பவங்கள் இரக்கமற்று தாக்குவது நமது தேசியத்தின் இதயத்தை நொறுக்குவதாக உள்ளது. இதனை கவனிப்பதற்கு இதுவே சரியான தருணம். வன்முறை, சகிப்புத்தன்மையின்மை, நேர்மையற்ற எண்ணம் கொண்ட சக்திகளிடம் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இதுவரை இல்லாத அளவுக்கு கொந்தளிப்பான சூழ்நிலை இந்த பிராந்தியத்தின் பல பகுதிகளில் பரவி உள்ளது. இதனால் பிராந்திய அளவில் நிலையற்றதன்மை அதிகரித்துள்ளது. தீவிரவாதத்தின் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமான மாற்றி அமைக்கப்பட்ட போர் என்பதை தெளிவாக காட்டுகிறது. இப்போது நாட்டின் எந்த மூலையும் இந்த கொடூரமான அரக்கனிடம் இருந்து பாதுகாப்பானது என்று கூறும் நிலையில் இல்லை.
தீவிரவாதம் பைத்தியக்காரத்தனமான குறிக்கோள் கொண்ட உணர்ச்சிகளால் தூண்டப்பட்டது. அர்த்தமற்ற கடும் வெறுப்புணர்வால் ஊக்குவிக்கப்படுகிறது. அப்பாவிகள் பலரை கொல்வதன் மூலம் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த போர் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்டது. புற்றுநோயான இது உறுதியான கத்தியால் அறுவைசிகிச்சை செய்து அகற்றப்பட வேண்டும். தீவிரவாதத்தில் நல்லது அல்லது கெட்டது என்று எதுவும் இல்லை. அனைத்துமே முழுமையாக கொடுமையானது தான்.
தேசங்களுக்கு இடையே பிரச்சனைகள் இருப்பது நம் அனைவருக்கும் நன்றாக தெரியும். நமது நெருங்கிய அண்டை நாட்டுடன் இயற்கையாகவே சில பிரச்சினைகள் உள்ளது. அவைகளை தீர்ப்பதற்கான பாலம் அமைக்க நாகரிகமான வழிகள் உள்ளன.
பேச்சுவார்த்தை, கருத்து பரிமாற்றம் போன்றவை தொடர்ந்து நடைபெற வேண்டும். ஆனால் குண்டு மழைக்கு இடையே நாம் அமைதி பற்றி பேச்சுவார்த்தை நடத்த முடியாது. நமது அண்டை நாடுகளுடனான பிரச்சினைகளை அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும். இவ்வாறு உரை நிகழ்த்தினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
