பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் – லண்டன் சுரங்க ரெயில் பணியாளர் வேலை நிறுத்தம் வாபஸ்
நாளை நடைபெறுவதாக இருந்த லண்டன் சுரங்க பாதை ரெயில் பணியாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இரவு நேர பணி மற்றும் சம்பள உயர்வு தொடர்பான கோரிகைகளை வலியுறுத்தி நாளை ஒருநாள் வேலை நிறுத்தம் செய்ய போவதாக ’ரெயில், கடல்வழி மற்றும் போக்குவரத்து’ (RMT) தொழிற்சங்கம் அறிவித்திருந்தது. இந்த வேலை நிறுத்தம் நடைபெற்றால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாக கூடும் என்று அஞ்சப்பட்டது.
இந்நிலையில் நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றத்தை அடுத்து நாளை நடைபெறுவதாக இருந்த பணியாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. நிர்வாகம் அளித்துள்ள வாக்குறுதிகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் ஆர்.எம்.டி. சங்கம் தெரிவித்துள்ளது.
2016-01-26



காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
