அஞ்சலோ மத்தியூஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் 3 மணிநேரம் வாக்குமூலம்!
Tuesday, 19 January 2016 13:39
இலங்கைக் கிரிக்கட் அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் இன்று செவ்வாய்க்கிழமை சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலமளித்தார்.
பணத்துக்காக ஆட்டநிர்ணயத்தில் ஈடுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கைக் கிரிக்கட் அணி வீரர்களான குசால் ஜனித் பெரேரா மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர், சர்வதேச கிரிக்கட் சபையிடம் அண்மையில் முறைப்பாடு செய்திருந்தனர். இது தொடர்பிலேயே தான் வாக்குமூலமளித்தாக மத்தியூஸ் தெரிவித்துள்ளார்.