கொந்தளிப்பினால் நியு பவுண்லாந்தில் அமெரிக்க விமானம் தரையிறக்கப்பட்டது.
கனடா-அமெரிக்க ஏர்லைன்ஸ் பயணிகள் ஜெட் ஒன்று ஞாயிற்றுகிழமை இரவு சென்ட்.ஜோன்ஸ் நியு பவுன்லாந்தில் ஒரு அவசர தரையிறக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகியது. கடுமையான கொந்தளிப்பு தாக்கம் இதற்கு காரணமென கூறப்பட்டுள்ளது.
தரையிறக்கப்பட்டதும் மூன்று விமான பணியளார்கள் மற்றும் நான்கு பயணிகள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விமானத்தில் இருந்த சிலர் காயமடைந்ததாகவும் ஆனால் காயங்களின் இயல்பு அல்லது தீவிரம் உடனடியாக தெரியவரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Flight 206 அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம் மியாமியிலிருந்து உள் ஊர் நேரம் பிற்பகல் 3மணிக்கு புறப்பட்டுள்ளது. விமானம் மிலான் நோக்கி சென்று கொண்டிருந்த சமயம் ‘கடுமையான’ கொந்தளிப்பிற்கு ஆளாகியது. இருக்கை பட்டியின் வெளிச்சம் எரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
பயணிகள் பீதியடைய ஆரம்பித்தனர். விமான பணியாளர்கள் காயமடைந்தவர்களிற்கு உதவும் முயற்சியில் இறங்கினர்.
‘நாங்கள் கீழே போகின்றோம்’ என உணர்ந்ததாக ஒரு பயணி தெரிவித்தார்.
யுஎஸ்சின் வடகிழக்கு பகுதியை தாக்கிய பாரிய புயல் காற்றின் எச்சங்களான கடினமான காற்றாக இருக்கலாம் என பைலட் Capt. Bertrand Lecocq கூறியுள்ளார்.
விமானம் சென்ட்.ஜோன்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் பிற்பகல் 9.45ற்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் 192பயணிகள் மற்றும் 11 பணிக்குழு அங்கத்தவர்கள் இருந்தனர் என விமான நிறுவனம் உறுதிசெய்துள்ளது.
96 total views, 96 views today




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
